×

ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

சென்னை: ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் கிருஷ்ணா ஜூவல்லரி என்ற நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைக் கடைக்கு வந்த 4 பேர், துப்பாக்கி முனையில் மிரட்டி உரிமையாளர் பிரகாஷின் கை, கால்களை கட்டி போட்டுள்ளனர். துப்பாக்கி முனையில் சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகளை மர்மகும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

The post ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Avadi ,CHENNAI ,Krishna ,Muthabudupettai ,Aavadi ,Prakash ,
× RELATED ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து...