×

கர்நாடகாவில் சோகம்!: டிப்பர் லாரி கவிழ்ந்து மண் சரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..!!

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்து மண் சரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். கர்நாடகாவின் பாகல்கோட்டை மாவட்டத்தில் இந்த கோரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பாகல்கோட்டை மாவட்டத்தின் பாடரதின்னி கிராமத்தை சேர்ந்த யாங்கப்பா ஹோலோமட்டி, அவரின் மனைவி, மகன், மகள், மருமகன் ஆகிய 5 பேரும் நேற்று கூலி வேலை செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது. இதில் டிப்பர் லாரியில் இருந்த மண் நடந்து கொண்டு வந்திருந்த யாங்கப்பா குடும்பத்தினர் மீது சரிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய 5 பேரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், ஜேசிபி உதவியுடன் 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி அதிவேகமாக வந்ததன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. லாரி ஓட்டுநர் சம்பவம் நடைபெற்ற உடனேயே அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவரை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கர்நாடகாவில் சோகம்!: டிப்பர் லாரி கவிழ்ந்து மண் சரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Karnataka ,Bagalkottai district ,Yangappa Holomatti ,Patarathinni ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி