×

நாட்டின் வளர்ச்சிக்காக அடித்தளம் அமைத்தது காங்கிரஸ் கட்சி தான்: சித்தராமையா பிரசாரம்

மைசூரு: மக்களவை தேர்தலை முன்னிட்டு மைசூரு-குடகு மக்களவை தொகுதியின் கிருஷ்ணராஜா பேரவை தொகுதியில் ஜனதுவணி-2 யாத்திரை மாநாட்டை முதல்வர் சித்தராமையா தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி ஏழை மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர், மகளிருக்கு ஆதரவாக செய்துள்ள ஒரே ஒரு பணி குறித்து யாருக்காவது தெரியுமா? அவர் வெறும் பொய்களை கூறி உணர்வுபூர்வமாக பேசுபவர். எந்த முகத்தை வைத்து கொண்டு கர்நாடகத்தில் வாக்கு சேகரிக்க வருகிறார் மோடி.

அவருக்கு நீங்கள் வாக்களித்தால் நீங்கள் ஏமாந்தவர்கள் தானே? சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் வளர்ச்சிக்காக அடித்தளம் அமைத்தது காங்கிரஸ் கட்சி தான். ஏழ்மையை ஒழிக்க இந்திராகாந்தி 20 அம்ச திட்டத்தை அமல்படுத்தினார். வெறும் பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிரதமர் மோடி ஏழைகளுக்காக ஒரு அம்ச திட்டத்தை ஏன் கொண்டு வரவில்லை. இதுபோன்ற பாஜ கட்சிக்கு கர்நாடக மக்கள் வாக்களிக்க வேண்டாம்’ என்றார்.

The post நாட்டின் வளர்ச்சிக்காக அடித்தளம் அமைத்தது காங்கிரஸ் கட்சி தான்: சித்தராமையா பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Congress Party ,Siddaramaiah Prasaram ,Mysore ,Chief Minister ,Siddaramaya ,Janatuwani-2 Pilgrimage Conference ,Krishnaraja Bharava ,Mysuru-Gudagu Lok Sabha ,Lok Sabha elections ,Narendra Modi ,Dinakaran ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...