×

சொன்னத எப்போ செஞ்சி இருக்காங்க… பாஜ தேர்தல் அறிக்கை வெறும் பேப்பர்: சிம்பிளா முடித்த வைகைச்செல்வன்

சேலத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, நேற்று அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் பங்கேற்ற அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜ தேர்தல் அறிக்கை வெறும் காகிதம். அது எந்த விதமான பயனையும் தராது. பாஜவுடன் எங்களுக்கு எந்தவொரு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அதிமுக தனித்து இயங்குகிற மக்கள் இயக்கம். 7 முறை அதிகாரத்தை மக்கள் வழங்கியுள்ளார்கள். தற்போது எதிர்கட்சியாக பணியாற்றுகிறோம். பாஜவுடன் எங்களுக்கு எதற்கு கள்ள உறவு?. 2014, 2021ம் ஆண்டுகளில் நல்ல உறவு வைத்திருந்தோம். தற்போது வேண்டாம் என்று பாஜவுடன் உறவை முறித்துக் கொண்டு வந்து விட்டோம்.

பாஜ கூறும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதில் பல்வேறு சர்ச்சைகள் இருக்கிறது. அதுபற்றி தேர்தல் முடிந்த பிறகு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கி கூறுவார். தேர்தல் வாக்குறுதியை ஒருபோதும் பாஜ நிறைவேற்றுவதில்லை. அதனை தேர்தலுக்கான அறிக்கையாக மட்டுமே பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் வரும் போது வராத பிரதமர் மோடி, தற்போது வருவது வாக்கு அரசியல் தானே?. அது போன்றது தான் பாஜ தேர்தல் அறிக்கை. இவ்வாறு வைகைச்செல்வன் கூறினார்.

அண்ணாமலைக்கு எச்சரிக்கை
‘பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, அரசியலில் அரைவேக்காடு. அரசியலுக்கு புதிய வரவு. அதிமுக அசைக்க முடியாத எஃகு கோட்ைட. இந்த எஃகு கோட்டைக்குள் எந்த கொம்பனும் ஊடுருவி, ஓட்டை போட முடியாது. ஆகவே, அண்ணாமலையை மீண்டும் ஒருமுறை எச்சரிக்கிறோம். அதிமுக பற்றியும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பார்த்து பேச வேண்டும்’ என்று வைகைசெல்வன் கூறி உள்ளார்.

The post சொன்னத எப்போ செஞ்சி இருக்காங்க… பாஜ தேர்தல் அறிக்கை வெறும் பேப்பர்: சிம்பிளா முடித்த வைகைச்செல்வன் appeared first on Dinakaran.

Tags : BJP ,Vaikachelvan ,Ambedkar ,Salem ,AIADMK ,General ,Edappadi Palaniswami ,AIADMK Policy ,Propagation ,Minister ,
× RELATED பாபாசாகேப் அம்பேத்கரே வந்து...