×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் சோதனை

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக துணை பொதுசெயலாளரும், தற்போதைய எம்பியுமான ஆ.ராசா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாலை 3.45 மணி அளவில் ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கினார். அப்போது அங்கு காத்திருந்த தேர்தல் பறக்கும் படையினர், ஹெலிகாப்டர் மற்றும் அதில் கொண்டு வரப்பட்ட உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது ஹெலிகாப்டரின் அருகில் அமைச்சர் உதயநிதி நின்றுகொண்டிருந்தார். சுமார் 15 நிமிட நேரம் சோதனை நடந்தது. ஆனால் ஹெலிகாப்டரில் இருந்து எந்த ஒரு பொருளும் கைப்பற்றப்படவில்லை. இதனைத்தொடர்ந்து பறக்கும் படையினர் அங்கிருந்து சென்றனர்.

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,DMK ,general secretary ,A. Raza ,Nilgiris ,India Alliance ,Udhayanidhi Stalin ,Coimbatore ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...