×

நாமக்கல் தொழிலதிபர் வீட்டில் ஐடி ரெய்டு ரூ.30 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல்-பரமத்தி ரோடு இபி காலனியைச் சேர்ந்த தொழில் அதிபர் செல்லப்பன் வீட்டில், நேற்று முன்தினம் பறக்கும் படை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் இருந்து கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடந்தது.

சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த சோதனையின் முடிவில், செல்லப்பன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ₹1 கோடியே 1 லட்சத்து 5 ஆயிரத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அவரது வீட்டில் இருந்து சுமார் ₹30 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை, அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 வாரத்துக்கு முன், நாமக்கல்லை சேர்ந்த பஸ் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ₹4.50 கோடியை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

நாமக்கல்லில் இதுவரை சோதனை நடத்தப்பட்ட இரண்டு பேருமே, தொழில் அதிபர்கள் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், எந்த அரசியல் கட்சியினருக்கு உரியது என்பது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் ெதாடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post நாமக்கல் தொழிலதிபர் வீட்டில் ஐடி ரெய்டு ரூ.30 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Flying Squad and Income Tax Department ,Chellappan ,EP Colony ,Namakkal-Paramathi Road ,Chennai ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...