×

மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை

இம்பால்: வாக்குப்பதிவுக்கு 6 நாட்களே உள்ள நிலையில் மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் வேட்பாளருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மணிப்பூரில் முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் இரு இளைஞர்கள் பலியாகினர். மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இரு குழுவினர் இடையே மோதல் இருந்து வரும் நிலையில், அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் மணிப்பூரின் இரண்டு தொகுதிகளில் வரும் 19ம் தேதியும், வரும் 26ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், நேற்று காங்போக்பி-இம்பால் கிழக்கு எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 குக்கி பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.

இதற்கு முன்னதாக, மணிப்பூரில் காங்கிரஸ் வேட்பாளர்களின் பிரசாரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடந்தது. அதனால், இன்னர் மணிப்பூரின் காங்கிரஸ் வேட்பாளரும், ஜேஎன்யு பேராசிரியருமான பிமல் அகோய்ஜாமுக்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. முன்னதாக தெக்னோபால் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு பிரிவைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர். அதன் தொடர்ச்சியாகவே நேற்று காங்போக்பி-இம்பால் கிழக்கு எல்லையில் உள்ள ஃபெயிலங்கமோல் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அதனால் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் பின்னணியில் குறிப்பிட்ட குழுவின் போராளிகள் தான் காரணம் என்றும், சம்பந்தப்பட்ட குற்றவாளிளை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

The post மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,
× RELATED வெளிமணிப்பூரில் 81.46% வாக்குப்பதிவு