×

தமிழைப்பற்றி பேசி தமிழர்களை ஏமாற்றப் பார்க்கும் மோடி: சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

வேதாரண்யம்: நாகை மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சிஐடியு மாநில தலைவருமான சவுந்தர்ராஜன் நேற்று மாலை வேதாரண்யம் நகராட்சி, ஆயக்காரன்புலம், தாணிகோட்டகம், கரியாப்பட்டினம் பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஒன்றியத்தில் 10 ஆண்டுகளாக அம்பானி, அதானிக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் பத்திரத்தில் பல கோடி ரூபாய் ஊழல்களை பாஜக செய்துள்ளது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதியை குறைவாகவும், ஆளும் கட்சிக்கு தாராளமாகவும் அளித்து ஓரவஞ்சனை செய்கிறது. அதிமுக, பாஜக இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது. மோடி தமிழை பற்றி பேசி தமிழர்களை ஏமாற்ற பார்க்கிறார். அது ஒரு போதும் நடக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழைப்பற்றி பேசி தமிழர்களை ஏமாற்றப் பார்க்கும் மோடி: சவுந்தரராஜன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Soundararajan ,Modi ,Vedaranyam ,Marxist Party ,CITU ,President ,Soundarrajan ,Vedaranyam Municipality ,Ayakkaranpulam ,Thanikottagam ,Kariyapatnam ,Communist ,India ,Selvaraj ,Nagai ,Lok ,Sabha ,Tamils ,
× RELATED ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம்...