×

ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

ராமநாதபுரம், ஏப்.14: ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஜெயபெருமாள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். இவர்கள் தினமும் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார். கீழக்கரை நகர் பகுதியில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது, தேர்தலில் வெற்றி பெற்றதும் பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்த்து வைப்பேன். படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க புதிய தொழிற்சாலை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். தொகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மக்களின் அடிப்படை வசதிகளை உடனே தீர்ப்பேன் என்று கூறி வாக்குகளை கேட்டார்.

பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்,ராமநாதபுர மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் எம்.மணிகண்டன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட பொருளாளர் குமரவேல், கீழக்கரை நகர செயலாளர் ஜகபர் உசைன், சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரவீன் குமார், சாய்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன்ள், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் (எ) ஜெயச்சந்திரன், விவசாய அணி செயலாளர் சண்முக பாண்டியன் மற்றும் தேமுதிக, எஸ்டிபிஐ, பார்வர்ட் பிளாக், மருதுசேனை, புதிய தமிழகம் மற்றும் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள் மற்றும் கிளைக் செயலாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,AIADMK ,Jayaperumal ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க...