- இந்தியா
- ராகுல் காந்தி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- மு.கே ஸ்டாலின்
- கோயம்புத்தூர் செட்டிபாளையம்
- இந்தியா கூட்டணி
- காங்கிரஸ்
- தின மலர்
நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் ஜூன் 4ம் தேதி இந்தியா, ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியை தரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை செட்டிபாளையத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக, நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் ராகுல் காந்தி கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையின் எதிர்புறத்தில் இருந்த இனிப்பகத்திற்கு சாலை தடுப்பை தாண்டி சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மைசூர்பாகு வாங்கினார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. முதல்வர் அந்த வீடியோவை மேற்கோள் காட்டி ஜூன் 4ம் தேதி இந்தியா, ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியை தரும் என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ். எனது சகோதரரின் இனிய செயலால் நான் நெகிழ்ச்சி அடைந்தேன். ஜூன் 4ம் தேதி இந்தியா அவருக்கு இனிப்பான வெற்றியை தரும்.
The post ஜூன் 4ம் தேதி இந்தியா, ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியை தரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.