×

சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கும்பகோணத்தில் அதிமுக தேர்தல் பணிமனையை மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்து பேசும்போது, ‘அதிமுகவில் இரட்டை தலைமை இருந்தபோது நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக முடிவெடுத்து சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தான் அதிமுகவிற்கு இரட்டை தலைமை வேண்டாம் ஒற்றை தலைமை வேண்டும் என முடிவு செய்யப்பட்டு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிஏஏ சட்டம் வருவதற்கு ஓபிஎஸ் தான் காரணம். மேலும் அதிமுகவிற்கும், பாஜவிற்கும் இனி எந்த காலத்திலும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை,’ என்றார்.

The post சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார் appeared first on Dinakaran.

Tags : OPS ,CAA ,EPS ,AIADMK ,Kumbakonam ,Mayiladuthurai ,minister ,OS Maniyan ,O. Panneerselvam ,Edappadi ,Dinakaran ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...