×

கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்

சேலம்: பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை வருவதால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. இந்தவகையில், தாம்பரத்தில் இருந்து சேலம், ஈரோடு, கோவை வழியே மங்களூருக்கு கோடை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில் (06049) வரும் 19, 26, மே 3, 10, 17, 24, 31ம் தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் (7 சேவை) இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் மதியம் 1.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியே சேலத்திற்கு இரவு 7.47 மணிக்கு வந்து சேர்கிறது.

பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு, ஈரோட்டிற்கு இரவு 8.45க்கும், திருப்பூருக்கு இரவு 9.38க்கும், கோவைக்கு இரவு 10.37க்கும் சென்று பாலக்காடு, ஒட்டப்பாலம், திரூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு வழியே மங்களூருக்கு அடுத்தநாள் (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், மங்களூரு-தாம்பரம் சிறப்பு ரயில் (06050) வரும் 21, 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2ம் தேதிகளில் ஞாயிறு தோறும் (7 சேவை) இயக்கப்படுகிறது.

மங்களூருவில் மதியம் 12 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கோழிக்கோடு, பாலக்காடு வழியே கோவைக்கு இரவு 7.32க்கும், திருப்பூருக்கு இரவு 8.18க்கும், ஈரோட்டிற்கு இரவு 9.05க்கும் வந்து சேலத்திற்கு இரவு 10.12 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு ஜோலார்பேட்ைட, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியே தாம்பரத்திற்கு அடுத்தநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.

The post கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில் appeared first on Dinakaran.

Tags : Thambaram-Mangaluru ,Salem ,Tambaram ,Mangalore ,Erode ,Coimbatore ,-Mangalore ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...