தேனி: மக்களவை தேர்தலுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது என அண்ணாமலை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு உண்மையான தலைவர்கள் கைக்கு அதிமுக வந்துவிடும். காண்ட்ராக்டர்களுக்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று அண்ணாமலை காட்டமான விமர்சனம் செய்தார். யார் எட்டப்பன் என்பதில் அதிமுக தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
The post மக்களவை தேர்தலுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது: அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம் appeared first on Dinakaran.