×

நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கிய பாஜக பிரமுகர் கைது..!!

நெல்லை: நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். திம்மராஜபுரத்தில் பயணிகளை ஏற்றிய போது பேருந்தில் பாஜக சின்னத்தை பாஜக பிரமுகர் மருதுபாண்டி ஒட்ட முயன்றுள்ளார். தடுக்க முயன்ற நடத்துனர் பாஸ்கர் உடன் தகராறு ஏற்பட்டுள்ளது; தட்டிக்கேட்ட ஓட்டுநர் சுப்பிரமணியன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் தலையில் சோடா பாட்டிலால் தாக்கிவிட்டு பாஜக பிரமுகர் மருதுபாண்டியன் தப்பியோடியுள்ளார். மருதுபாண்டியனை அதிரடியாக கைது செய்த போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

The post நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை சோடா பாட்டிலால் தாக்கிய பாஜக பிரமுகர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Nella ,Maruthubandi ,Thimmarajpur ,Baskar ,Dinakaran ,
× RELATED நெல்லை பாஜக வேட்பாளர் நயினார்...