×

தேனியில் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டை முகநூலில் பதிவிட்ட இருவர் மீது வழக்குப்பதிய ஆட்சியர் பரிந்துரை..!!

தேனி: தேனியில் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டை முகநூலில் பதிவிட்ட இருவர் மீது வழக்குப்பதிய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டை பதிவிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய தேனி எஸ்.பி.க்கு ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். வாக்குச்சீட்டை முகநூலில் பதிவிட்ட விக்கிதேவன், சிவமாயன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

The post தேனியில் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டை முகநூலில் பதிவிட்ட இருவர் மீது வழக்குப்பதிய ஆட்சியர் பரிந்துரை..!! appeared first on Dinakaran.

Tags : Theni ,Facebook ,Theni SP ,Wikidevan ,Sivamayan ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்