×

தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம்: திமுக வழக்கு

சென்னை: திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. அற்ப காரணங்களுக்காக தேர்தல் ஆணையம் நிராகரிப்பதாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் ஆணைய விதிப்படி விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பத்தை 2 நாட்களில் பரீசிலித்து அனுமதி தரவேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

The post தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம்: திமுக வழக்கு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,DMK ,CHENNAI ,RS Bharti ,Madras High Court ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...