×

திருப்பூர் பெண் மீது தாக்குதல் – பாஜக பிரமுகர் மீது வழக்கு

திருப்பூர்: திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தாக்கிய பா.ஜ.க. பிரமுகர் சின்னசாமி மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்தனர். திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை பா.ஜ.க.வினர் தாக்கியது குறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார். திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் ரெடிமேட் கடை நடத்தும் சங்கீதா என்ற பெண் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பியதால் தாக்கப்பட்டதாக சங்கீதா போலீசில் புகார் தெரிவித்துள்ளார். பிரச்சாரத்துக்கு வந்த பா.ஜ.க.வினரிடம் ஏராளமான பெண்கள் கேள்வி எழுப்பிய நிலையில் தன்னை மட்டும் தாக்கியதாக சங்கீதா புகார் கூறினார். திருப்பூர் ஆத்துப்பாளையத்துக்கு பிரச்சாரத்துக்கு வந்த பா.ஜ.க.வினரிடம் சங்கீதா ஜி.எஸ்.டி. வரி குறித்து கேள்வி எழுப்பினார்.

The post திருப்பூர் பெண் மீது தாக்குதல் – பாஜக பிரமுகர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,BJP ,J. K. Police ,Pramukar Sinasamy ,J. K. VINER ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...