×

தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் மீது போலீசார் வழக்கு!

ஈரோடு: தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளார். காங்கேயத்தில் நேற்று இரவு தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் விதிமுறைகளை மீறி சாலைகளில் 100-க்கும் மேற்பட்ட பாஜக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சி கொடிகள் கட்டப்பட்டன. தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில் வேட்பாளர் விஜயகுமார், தமாகா நிர்வாகிகள் தர்மராஜ், சுரேஷ் மீது 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

The post தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் மீது போலீசார் வழக்கு! appeared first on Dinakaran.

Tags : Erode Constituency ,Tamaka ,Erode ,GK Vasan ,Gangeyam ,Tamil State Congress ,Vijayakumar ,Dinakaran ,
× RELATED பெட்ரோல், டீசல் விலையும்...