×

நாகை அருகே வெடிவைத்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரத்தில் பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!!

நாகை: நாகை அருகே பாஜகவினர் வெடிவைத்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரத்தில் பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. நாகை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக ரமேஷ் கோவிந்த் போட்டியிடுகிறார். இவர் நேற்று மாலை நாகப்பட்டினம் வெளிபாளையம் காடம்பாடி பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் வெடிகள் வைத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி, ஓய்வு பெற்ற அரசு பஸ் ஓட்டுநர் என்பவர் கூரை வீட்டில் வெடிப்பட்டதில் தீப்பிடித்தது. தீ மளமளவென எரிந்து அருகில் உள்ள சுப்ரமணியன் ஓய்வு [பெற்ற நகராட்சி பணியாளர் வீட்டின் மீது தீப்பிடித்து எரிந்தது. இதில் இரண்டு வீடுகளும் எரிந்து நாசமானது.

இது குறித்து தகவல் அறிந்து நாகை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இது குறித்து வெளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சேதம் ரூ.10 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரசாரத்தின் போது வெடி வெடித்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரத்தில் பா.ஜக.வினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் வி.ஏ.ஓ. கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

The post நாகை அருகே வெடிவைத்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரத்தில் பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Nagai ,Ramesh Kovind ,Lok Sabha ,Gadambadi ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...