×

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினர். தமிழ் உள்ளிட்ட மொழித்தாள், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விருப்ப பாடம் என ஒவ்வொரு பாடத்துக்கான தேர்வும் குறிப்பிட்ட நாட்கள் விடுமுறை விடப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்ற வந்தது.

தேர்வுகள் முடிந்ததைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கி 22-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசு தேர்வுகள் இயக்ககம் ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 88 மையங்களில் சுமார் 50,000 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 10-ம் தேதி வெளியிடப்பட உள்ளது என பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...