×

எல்லா சமூகவிரோதிகளும் இங்குதான் இருக்காங்க… காவல் நிலையத்தில் வான்டெட் லிஸ்ட் கட்சிதான் பாஜ : வெச்சு செய்த அமைச்சர்

கோவை கரும்புக்கடை பகுதியில் ரமலான் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம், கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஈடுபட்டார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இது மிகவும் முக்கியமான காலகட்டம். இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி எழுத கூடிய ஒரு காலகட்டம். பாசிசவாதிகளிடம் இருந்தும், பிரிவினை வாதிகளிடமிருந்தும் இந்தியாவை மீட்க, மாநில உரிமைகளை மீட்க வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். இஸ்லாமியர்கள் மீது ஏகப்பட்ட அடக்குமுறைகள், எவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதோடு, அவர்களின் வலிகளுக்கு ஆறுதலாக இருக்கும் ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின் மட்டுமே.

அனைத்து ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சமுதாயத்தில் யாரெல்லாம் தாக்குதல்களுக்கு உள்ளாக்கபடுகிறார்களோ, யார் மீது எல்லாம் ஒடுக்கு முறைகள் எழுதப்பட்டிருக்கிறதோ? அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாவலராக திகழ்பவர் முதல்வர் ஸ்டாலின். சமூக விரோதிகளை எடுத்து விட்டால் பாஜவில் ஆட்களே இருக்க மாட்டார்கள். அந்த கட்சியே இருக்காது. பட்டியல் போட்டு ஐடி விங்கில் ஒட்டி இருக்கிறோம். பாஜ கட்சி முழுவதும் சமுதாயத்திற்கு எதிரானவர்கள், சமூக விரோதிகளாகவே இருக்கிறார்கள்.

சமுதாயத்தின் ஒட்டுமொத்த விரோதிகள் அந்த இயக்கத்தில் தான் சேர்த்திருக்கிறார்கள். அந்த காலத்தில் வாஜ்பாய் போன்ற அற்புதமான தலைவர்கள் பாஜவில் இருந்தார்கள். சமீபகாலத்தில் அவர்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கை என்பது காவல் நிலையத்தில் வான்டெட் லிஸ்ட் வாங்கிக்கொள்வார்கள் போல் இருக்கிறது. அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிப்படையாக இதை ஒத்துக்கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post எல்லா சமூகவிரோதிகளும் இங்குதான் இருக்காங்க… காவல் நிலையத்தில் வான்டெட் லிஸ்ட் கட்சிதான் பாஜ : வெச்சு செய்த அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Baj ,Minister Minister ,T. R. P. Raja ,Muslims ,Ramadan ,Coimbatore ,Karumbukkady ,DMK ,Ganapathi Rajkumar ,India ,minister ,
× RELATED மன்னார்குடியில் தொழிற்பேட்டைக்காக...