×

தேர்தல் பத்திர ஊழல் வழக்கில் பிரதமர் மோடியை சிறையில் தள்ளுவோம்: லாலுபிரசாத் மகள் மிசா பார்தி ஆவேசம்

பாட்னா: மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தேர்தல் பத்திர ஊழல் வழக்கில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சிறையில் அடைப்போம் என்று லாலுபிரசாத் மகள் மிசா பார்தி தெரிவித்தார். பீகார் மாநிலம் பாடலிபுத்ரா மக்களவை தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவ் மூத்த மகளும், மாநிலங்களவை எம்பியுமான மிசா பார்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மிசா பார்தி கூறுகையில், ‘தேர்தல் பத்திர நன்கொடை மிகப்பெரிய ஊழல். மத்திய நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தின் மூலம் நன்கொடை திரட்டியதற்காக பீகாரில் உள்ள பாஜ தலைவர்களும், பிரதமர் மோடியும் சிறையில் அடைக்கப்படுவார்கள்’ என்றார். மிசா பார்தியின் இந்த கருத்தால் பா.ஜ கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு பதில் அளித்த பாஜ தலைவர் ஜேபி நட்டா, ‘ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விசாரணையை எதிர்கொண்டு ஜாமீனில் வெளிவருபவர்கள், களங்கமற்ற அரசியல் வாழ்க்கையைக் கொண்ட மோடி மீது பலவிதமான அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர்.

கடந்த 23 ஆண்டுகளில் மோடி குஜராத் முதல்வராக 12 ஆண்டுகளுக்கும் மேலாகவும், 10 ஆண்டுகள் பிரதமராகவும் பதவி வகித்து வருகிறார். அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. அப்படிப்பட்ட நபரை சிறைக்கு அனுப்புவேன் என்று மிசா பார்தி கூறுகிறார். பிரதமருக்கு எதிரான இதுபோன்ற கருத்துக்கள் எதிர்க்கட்சித் தலைவர்களின் விரக்தியை பிரதிபலிக்கின்றன. அதேசமயம் கால்நடைத் தீவன ஊழலில் ஈடுபட்ட லாலு பிரசாத் உடல் நலக் காரணங்களுக்காக ஜாமீனில் வெளியில் இருக்கிறார். அவரது மகள் பார்தியும் வேலை வாய்ப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். ஜாமீனில் இருப்பவர்களும், விசாரணையை எதிர்கொள்பவர்களும் மோடியை தவறாக பேசுகிறார்கள்’ என்றார்.

The post தேர்தல் பத்திர ஊழல் வழக்கில் பிரதமர் மோடியை சிறையில் தள்ளுவோம்: லாலுபிரசாத் மகள் மிசா பார்தி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Lalu Prasad ,Misa Bharti ,Patna ,India ,Modi ,Rashtriya ,Janata Dal ,Pataliputra ,Lok Sabha Constituency ,Bihar ,Misa Bharti Awesam ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...