×

மணல் கடத்திய வாலிபர் கைது

ராமேஸ்வரம், ஏப். 11: ராமேஸ்வரம் பேருந்து நிலையம் பின்பகுதியில் நள்ளிரவில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக வருவாய்துறை மற்றும் நகர் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ராம் நகர் பகுதியில் இருந்து மணலோடு வந்த டிராக்டரை போலீசார் பின் தொடர்ந்து மடக்கிப் பிடித்தனர். டிராக்டரை நடுரோட்டில் போட்டுவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். போலீசார் வண்டியை மணலோடு நகர் காவல் நிலையம் கொண்டு சென்று தப்பி ஓடியவர் குறித்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ராமேஸ்வரம் கிராம அலுவலர் அனுராஜ் அளித்த புகார் அடிப்படையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கொண்டேஸ்வரர் மடம் பகுதியை சேர்ந்த பழனியாண்டி (35) என்பவரை நகர் போலீசார் பிடித்து கனிமவள கடத்தல் பிரிவின் கீழ் கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

The post மணல் கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Ram Nagar ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...