×

மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை

மண்டபம், ஏப். 11: மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம்-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சி குஞ்சார்வலசை கிராம பகுதியில் காவல் சோதனை சாவடி அமைந்துளளது. இந்த பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வெளியூர்களிலிருந்து இருந்து ராமேஸ்வரத்திற்கு செல்லும் வாகனங்களில் சோதனை நடத்தினர். வாகனத்தில் தேர்தல் விதிமுறைக்கு மாறாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய பணமோ அல்லது பரிசு பொருட்களோ கொண்டு செல்கின்றனரா என தீவிரமாக சோதனையிட்டனர்.

The post மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Mandapam ,National Highway ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு