×

விழுப்புரம் அருகே சாராய வியாபாரிகள் தடுப்பு காவலில் கைது

விழுப்புரம், ஏப். 11: விழுப்புரம் அருகே பிரபல சாராய வியாபாரிகள் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன்(38). பிரபல சாராய வியாபாரி. இதேபோல் வானூர் அருகே வாழப்பட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா(29). இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி 29ம் தேதி காரில் மதுபாட்டில் கடத்திச் சென்றபோது விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் தொடர்ந்து மதுபாட்டில் கடத்தல், சாராயம் விற்பனை போன்ற தொழிலில் ஈடுபட்டு வருவதால் அவர்களின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி தீபக்சிவாஜ் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் பழனி நேற்று அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து இருவரும் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post விழுப்புரம் அருகே சாராய வியாபாரிகள் தடுப்பு காவலில் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Katiravan ,Puducherry ,Surya ,Vazhapatampalayam ,Vanur ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...