×

மக்களவை தேர்தல்.. பிரச்சாரத்தின் போது எதிரெதிரே சந்தித்துக்கொண்ட விஜய பிரபாகரன், ராதிகா சரத்குமார்..!!

விருதுநகர்: நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக வேட்பாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து, வித்யாசமான முறையிலும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் சாத்தூரில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அங்கு இருவரது வாகனமும் எதிரெதிரே வந்தபோது விஜய பிரபாகரன் வாகனத்தில் நின்றபடி பேசி கொண்டிருந்தார்.

எதிரே வந்த ராதிகா பரப்புரையை முடித்து விட்டு வாகனத்திற்கு உள்ளே சென்றார். இதையடுத்து ராதிகாவிடம் இருந்து பெண்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த மக்களிடம் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்தார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் ஆம்பூர் கடைவீதிகளில் குடும்பத்தினருடன் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த இஸ்லாமியர்களிடையே உருது மொழியில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

The post மக்களவை தேர்தல்.. பிரச்சாரத்தின் போது எதிரெதிரே சந்தித்துக்கொண்ட விஜய பிரபாகரன், ராதிகா சரத்குமார்..!! appeared first on Dinakaran.

Tags : Election of the People ,Vijaya Prabhakaran ,Radhika Sarathkumar ,Virudhunagar ,Vijayaprabharan ,BJP ,Chathur ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக...