×

மக்களவை தேர்தல்.. தமிழ்நாட்டில் இதுவரை 3.6 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு..!!

சென்னை: மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 3.6 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

இதுவரை 3.6 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது: சத்யபிரத சாகு
மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 3.6 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 57 சதவீதம் பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளன. ஏப்.13-க்குள் பணியை முடிக்க வேண்டும். தற்போது வரை வருமான வரித்துஐற ரூ.15.86 கோடி மதிப்பிலான ரொக்கம், நகைகளை பறிமுதல் செய்துள்ளது.

தேர்தல் புறக்கணிப்பவர்களுடன் அதிகாரிகள் பேசுவர்: சத்யபிரத சாகு
தேர்தல் புறக்கணிப்பதாக கூறுபவர்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்துவார். மாவட்ட தேர்தல் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துவார்.

சின்னம் ஒட்டும் பணி 4 நாளில் முடிக்க அறிவுறுத்தல்: சத்யபிரத சாகு
வாக்கு இயந்திரங்களில் பெயர், சின்னம் ஒட்டும் பணி 3 அல்லது 4 நாட்களில் முடிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

The post மக்களவை தேர்தல்.. தமிழ்நாட்டில் இதுவரை 3.6 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Satyapratha Sahu ,Chennai ,Tamil ,Nadu ,Lok Sabha Elections ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்...