×

இந்தியாவில் ரூ.1,16,521 கோடிக்கு ஐபோன்கள் தயாரிப்பு: ஆப்பிள் நிறுவனம் அசத்தல்

டெல்லி: ஆப்பிள் நிறுவனம் தனது மொத்த ஐபோன்களில் 14% ஐபோன்களை கடந்த (2023-24) நிதியாண்டில் இந்தியாவில் தயாரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் மொத்த ஐபோன்களில் 7-ல் ஒன்று தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்களின் மதிப்பு ரூ.1,16,521 கோடியாக உயர்ந்துள்ளதாக பிளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் தயாரிக்கப்படும் மொத்த ஐபோன்களில் 67 சதவீதத்தை சென்னை அருகே உள்ள ஆலையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரிக்கிறது.

சென்னை அருகே பெகட்ரான் அமைத்துள்ள ஆலையில் 17% ஐபோன்களும், விஸ்ட்ரான் ஆலையில் 16% ஐபோன்களும் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பான்மையான ஐபோன்களை தயாரித்துவரும் சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு தயாரிப்பு பணியை மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு ஐபோன் தயாரிப்பை மாற்றும் திட்டப்படியே நாட்டில் 14% ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெக்ட்ரானை வாங்க டாடா குழுமம் பேச்சுவார்த்தை:

தமிழ்நாட்டில் ஐபோன் தயாரித்துவரும் பெகட்ரான் தொழிற்சாலையை வாங்க டாடா குழுமம் பேச்சு நடத்துவதாக ராய்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. தைவானை சேர்ந்த பெகட்ரான் நிறுவனம் சென்னை அருகே உள்ள ஆலையில் ஐபோன்களை தயாரித்து வருகிறது. ஏற்கனவே பெகட்ரானுடன் இணைந்து புதிய ஆலையை ஒசூரில் டாடா குழுமம் அமைக்கும் நிலையில் சென்னை ஆலையை வாங்க டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

The post இந்தியாவில் ரூ.1,16,521 கோடிக்கு ஐபோன்கள் தயாரிப்பு: ஆப்பிள் நிறுவனம் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : India ,Apple ,Delhi ,
× RELATED ஐபோன் கேமரா தயாரிக்க தமிழக நிறுவனத்துடன் பேச்சு!!