×

தமிழகம் வெள்ளத்தில் தத்தளித்தபோது ஒரு பைசா கூட தராமல் வஞ்சித்த பாஜவை இந்தியா கூட்டணி வெளியேற்றிவிடும்

*அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

செய்யாறு : ஆரணி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து செய்யாறு தொகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று முன்தினம் இரவு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். செய்யாறு ஒன்றியம் திருமணி, கீழ்புதுப்பாக்கம், அனக்காவூர் ஒன்றியம் ஞானமுருகன்பூண்டி, வெம்பாக்கம் ஒன்றியம் மாங்கால் கூட்ரோடு, தூசி மாமண்டூர், அழிவிடைதாங்கி உட்பட பல்வேறு கிராமங்களில் அமைச்சர் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.

அப்போது, அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி சொன்னார் வீடு இல்லாதவர்களுக்கு 3 சென்ட் நிலம் தருகிறேன் என்று. ஆனால் கொடுக்கவில்லை. இந்தியாவின் பிரதமர் நாட்டில் உள்ள 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருகிறேன். பிரதமராக்கினால், சுவிட்சர்லாந்துக்கு சென்று அங்குள்ள கருப்பு பணத்தை மீட்டெடுத்து ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். அதை செய்தாரா?

தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி விதிக்கக்கூடாது என அப்போது கலைஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு ஜிஎஸ்டி வரி, தங்கம் விலை உயர்வு, அத்தியாவசிய அரிசி, பருப்பு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டுக்குள் இல்லை. இபிஎஸ் பிரதமர் மோடியுடன் சேர்ந்து தமிழ்நாட்டை மொட்டையாக்கி விட்டுசென்றனர்.

மேலும், டீசல், பெட்ரோல் விலை, காஸ் விலை குறைப்பு என சொன்னார்கள். எதையும் செய்யாமல் பொய்யான வாக்குறுதியால் விலைவாசி உயர்வால் மக்களை அவதிக்குள்ளாகிவிட்டார்களே. ஜிஎஸ்டி என்ற பெயரில் கோடி கோடியாய் வசூல் செய்தார்களே. அதில் தமிழகம் வெள்ளத்தில் தத்தளித்தபோது ஒரு பைசா கூட தராமல் வஞ்சித்தார்களே. தமிழக மக்கள் என்ன ஏமாந்தவர்களா? பாஜவை இந்தியா கூட்டணி வெளியேற்றிவிடும்.

வரும் தேர்தல் மூலம் டெல்லியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைய இந்தியாவை காப்பாற்றுவதற்காக தான் திமுகவிற்கு வாக்களிக்க கேட்கிறோம். திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிகப்படியான வாக்குகளில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், ஒன்றிய செயலாளர்கள் என்.சங்கர், ஜே.சி.கே.சீனிவாசன், எம்.தினகரன், ஆ.ஞானவேல், சி.கே‌.ரவிக்குமார், திராவிட முருகன், ஒன்றியக்குழு தலைவர்கள் (வெம்பாக்கம்) த.ராஜி, (அனக்காவூர்) திலகவதி ராஜ்குமார், நகர செயலாளர் கே.விஸ்வநாதன், நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல் மற்றும் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, நேற்றிரவு திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து திமுக செய்தி மக்கள் தொடர்பு இணைச்செயலாளர் தமிழன்.பிரசன்னா அனக்காவூர் மற்றும் செய்யாறு ஒன்றிய கிராமங்களில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கிக்கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.இதேபோல், ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேற்கு ஆரணி ஒன்றிய கிராமங்களில் வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.

அப்போது, காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரசாத், தொகுதி பொறுப்பாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் தட்சணாமூர்த்தி, நகர செயலாளர் ஏ.சி.மணி, ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், மோகன், துரைமாமது, ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட துணைச்செயலாளர் ஜெயராணி ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தமிழகம் வெள்ளத்தில் தத்தளித்தபோது ஒரு பைசா கூட தராமல் வஞ்சித்த பாஜவை இந்தியா கூட்டணி வெளியேற்றிவிடும் appeared first on Dinakaran.

Tags : India alliance ,BJP ,Tamil Nadu ,Minister ,AV ,Velu ,Seiyaru ,DMK ,MS Dharanivendan ,Arani Lok Sabha Constituency ,Public Works ,AV Velu ,Seyyar ,Kilputhupakkam ,Anakavur ,India ,Dinakaran ,
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்