×

வேலூரில் பிரதமர் மோடியை வரவேற்க ஆள் இல்லாமல் வெறிச்சோடிய சாலை..!!

வேலூர்: வேலூரில் பிரதமர் மோடியை வரவேற்க ஆள் இல்லாமல் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. அப்துல்லாபுரத்தில் இருந்து வேலூர் கோட்டை மைதானம் வரை சாலை மார்க்கமாக பொதுக்கூட்ட மேடைக்கு மோடி காரில் செல்கிறார். சாலையின் இருபுறமும் மக்கள் நிற்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியை வரவேற்க பொதுமக்கள் யாரும் கூடாததால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post வேலூரில் பிரதமர் மோடியை வரவேற்க ஆள் இல்லாமல் வெறிச்சோடிய சாலை..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Vellore ,Modi ,Abdullahpuram ,Vellore Fort ,
× RELATED சொல்லிட்டாங்க…