×

திருமங்கலம் அருகே சோகம்: காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!

மதுரை: திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மதுரையைச் சேர்ந்த கனகவேல் என்பவர் மனைவி கிருஷ்ணகுமாரி, குழந்தையுடன் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும் போது சிவரக்கோட்டை என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டி என்பவர் சாலையை கடக்க முயன்ற போது கார் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. கார் இரண்டு முறை உருண்டு விபத்துக்குள்ளானது.

இதில் காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post திருமங்கலம் அருகே சோகம்: காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Madurai ,Shivarakota ,Kanagawel ,Krishnakumari ,Thalavaipur ,Shivarakottai ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...