×

இளம்பெண் மாயம்

கடத்தூர், ஏப்.10: கடத்தூர் அடுத்த பால் சிலம்பு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது 2வது மகள் ஜோதிகா(19). நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்தார். இந்நிலையில், பெற்றோர் அவரை ஊருக்கு அழைத்து வந்தனர். வீட்டில் இருந்தவர் கடந்த 7ம் தேதி திடீரென மாயமானார். இதையடுத்து, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், கடத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான ஜோதிகாவை தேடி வருகின்றனர்.

The post இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Kadoor ,Sivakumar ,Bal Silambu ,Jyothika ,Spinning ,Mill, ,Pallipalayam, Namakkal District ,
× RELATED பெண்ணை கர்ப்பமாக்கிய எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்