×

மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா; ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி தேர்வுகள் ஒத்திவைப்பு

ராமநாதபுரம்: மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அருள்மிகு கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள் நிகழ்ச்சியையொட்டி பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுக்கிணங்க, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 23.04.2024 செவ்வாய்கிழமை அன்று நடைபெற இருந்த அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் 24.04.2024 புதன்கிழமை அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

The post மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா; ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி தேர்வுகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Vaigai River ,Ramanathapuram District ,Ramanathapuram ,Madurai Kallagar ,Arulmiku Kallazakar ,Department of Education ,Kallazagar ,Dinakaran ,
× RELATED அழகர்மலையில் இருந்து வந்த...