×

காதலனை திருமணம் செய்து கொண்டதால் வீட்டின் முன்பு மகள் இறந்து விட்டதாக போஸ்டர் வைத்து கதறிய தந்தை

*தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை : வீட்டிற்கு தெரியாமல் காதலனை திருமணம் செய்து கொண்டதால் வீட்டின் முன்பு மகள் இறந்துவிட்டதாக தந்தை போஸ்டர் வைத்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தெலங்கானா மாநிலம் ராஜண்ண சிரிசில்லா மாவட்டம் பி.ஒய்.நகரைச் சேர்ந்த சிலுவேரி முரளி மகள் சிலுவேரி அனுஷா(18). இவர் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த இளம்பெண் சில மாதங்களாக இளைஞர் ஒருவரை காதலித்தார். இந்த விஷயம் வீட்டில் தெரிந்தால் என்ன நடக்கும் என்று பயந்து யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்த இளைஞனை நேற்றுமுன்தினம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வெளியே சென்ற மகள் வீட்டிற்கு வராததால், அவரது பெற்றோர் பயத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்தனர்.

ஆனால் அனுஷா எங்கேயும் இல்லாததால் அனைவரும் கவலையில் இருந்த நிலையில் பெற்றோருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அனுஷா அவரது தந்தைக்கு நேற்று போன் செய்து, காதலித்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதாக கூறினார். இதைகேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தன் மகள் அப்படி ஒரு செயலைச் செய்ய மாட்டாள் என்றும், தனது மகளின் மனதை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் கண்ணீர் மல்க தந்தை புலம்பினார்.

பின்னர் மகள் செய்த செயலால் மனம் உடைந்த முரளி திடீரென தனது மகள் இறந்து விட்டதாக பேனர் அடித்து வீட்டின் முன்பு வைத்து மகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறி அகல்விளக்கு ஏற்றி ஊதுவத்தி பற்ற வைத்து கதறி அழுதார். இந்த சம்பவம் அனைவரது மனதையும் பதற வைத்தது.

The post காதலனை திருமணம் செய்து கொண்டதால் வீட்டின் முன்பு மகள் இறந்து விட்டதாக போஸ்டர் வைத்து கதறிய தந்தை appeared first on Dinakaran.

Tags : Twilight ,Telangana ,Telangana State ,Rajanna Sirisilla ,District ,B. Y. Silueri ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து