×

சென்னை -நெல்லை கோடைகால சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கோடைக்கால விடுமுறையை ஒட்டி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏப். 12, 19, 26 மற்றும் மே 10,17,24,31-ல் சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னையில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.10-க்கு நெல்லை சென்று சேரும். நெல்லையில் இருந்து சென்னைக்கு ஏப். 11,18,25 மற்றும் மே மாதத்தில் 9, 16, 23, 30 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். நெல்லையில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30-க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். கோவில்பட்டி, சிவகங்கை, பட்டுக்கோட்டை, திருவாரூர், சீர்காழி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது

அதேபோல சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.45க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30க்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும். எழும்பூரில் இருந்து விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக இந்த ரயில் நெல்லை சென்றடையும்.

The post சென்னை -நெல்லை கோடைகால சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nellie ,Railway ,Southern Railway ,-Nellie Summer ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...