- இந்தியா
- கோயம்புத்தூர்
- திமுக
- கணபதி ராஜ்குமார்
- திருப்பூர்
- மக்களவைத் தேர்தல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி
- இந்தியா கூட்டணி
- தின மலர்
திருப்பூர்: நம்ம கோவை பழைய கோவையாக மாற I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்.19ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்து கட்சிகளின் தலைவர்களும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணபதி பாளையம், பொன் நகர், அவர பாளையம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் சாமிநாதனுடன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்காளர்கள் மத்தியில் அவர் பேசுகையில்; I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்றால் ஜி.எஸ்.டி. வரிகள் நீக்கப்படும். நமது கோவை பழைய கோவையாக மாறும். தொழிற்சாலைகள் விசைத்தறி தொழில் அனைத்தும் சிறப்பாக மாற உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.
The post நம்ம கோவை பழைய கோவையாக மாற I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களியுங்கள்: கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்குசேகரிப்பு appeared first on Dinakaran.