×

பாஜக செய்த சாதனை என ஏதாவது ஒன்றைச் சொல்லமுடியுமா?: திருப்பூர் நா.த.க. வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். திருப்பூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். பவானியில் வேனில் சென்று சீமான் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது பேசிய அவர், ஒரு டன் எடையுள்ள கார் தயாரிக்க 4.5 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள், நம் நாட்டிற்கு கார் தயாரிக்க வருகின்றன. நீர் மேலாண்மை திட்டத்தில் சீனா தெளிவாக உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் உள்ளது, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா? என சாடினார்.

விவசாயிகளுக்கு 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. தண்ணீர் பயிரை சென்றடைவதற்குள் மின்சாரம் போய்விடும். தடையில்லா மின்சாரத்தை வழங்கிவிட்டு, இலவசம் பற்றி பேசுங்கள். தென்கொரிய நிறுவனங்கள் தெளிவாக இந்தியா வந்து ஆலைகளை தொடங்குகின்றன என்றார். மேலும், கெயில் எரிவாயு குழாயை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்வது ஏன்? என கேள்வி எழுப்பினார். சாயக்கழிவுகளை கொட்டி நொய்யல் ஆற்றை கெடுத்துவிட்டதாக சீமான் குற்றம்சாட்டினார்.

பாஜக செய்த சாதனை என ஏதாவது ஒன்றைச் சொல்லமுடியுமா? ஒரு முறையாவது மோடி செய்தியாளர்களை சந்தித்தது உண்டா? என்று கேள்வி எழுப்பிய சீமான், மோடி செய்தியாளர்களை சந்தித்தால் போட்டியில் இருந்து விலகுகிறேன் என கூறினார். ஊழலை ஒழிப்பதாக கூறி தேர்தல் பத்திரங்களில் பாஜக ஊழல் செய்துள்ளது எனவும் கடுமையாக விமர்சித்தார்.

The post பாஜக செய்த சாதனை என ஏதாவது ஒன்றைச் சொல்லமுடியுமா?: திருப்பூர் நா.த.க. வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Tirupur N.D.K. ,Seeman ,Erode ,Naam Tamil Party ,Bhawani ,Seethalakshmi ,Naam Tamilar Party ,Tirupur ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...