×

விருதுநகர் அருகே அரிய வகை காட்டுப்பூனை வேட்டை

*2 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் அருகே அரியவகை காட்டுப்பூனையை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.விருதுநகர் அருகே ஆர்ஆர் நகர் பகுதியில் இரவு நேரங்களில் காட்டுப்பூனை உள்ளிட்ட வனவிலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விருதுநகர் வன பாதுகாப்பு படை உதவி மாவட்ட வன அதிகாரி மலர்கண்டன் உத்தரவின்பேரில், ரேஞ்சர் கார்த்திக் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆர்ஆர் நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் வேட்டைக்கு பயன்படும் பொருட்களை வைத்திருந்தனர். மேலும் அவர்களிடம் வேட்டையாடப்பட்ட அரிய வகை காட்டுப்பூனை உடல் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். இவர்கள், மேலபெத்துலுபட்டியை சேர்ந்த தங்கராஜ், சக்கமுத்து என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் கைது செய்தனர்.இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘வேட்டையாடப்பட்ட காட்டுப்பூனை அரிய வகையை சேர்ந்தது. இது வனவிலங்கு பாதுகாப்பு சட்ட அட்டவணை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதே பிரிவில்தான் புலி, சிறுத்தை, கரடி, யானை ஆகியவையும் உள்ளன’’ என்றார்.

The post விருதுநகர் அருகே அரிய வகை காட்டுப்பூனை வேட்டை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Srivilliputhur ,RR Nagar ,
× RELATED விருதுநகர் மாவட்டம்...