×

உச்சத்தில் தங்கம் விலை: இன்றும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது: நகை வாங்குவோர் கலக்கம்

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த மாதம் 28ம் தேதி சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது. 29ம் தேதி சவரன் ரூ.51 ஆயிரத்தை கடந்தது. கடந்த 3ம் தேதி சவரன் ரூ.52 ஆயிரத்தை தொட்டது. அதன் பிறகும் தங்கம் விலை ரூ.300, ரூ.400, ரூ.500 என்று தினசரி உயர்ந்து வந்தது. இதற்கிடையில் 4ம் தேதி சவரன் ரூ.52,360க்கு விற்றது. 6ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்கப்பட்டது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,660க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,870க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது; சவரனுக்கு ரூ.80 உயர்ந்து சவரன் ரூ.53,360க்கும், கிராம் ரூ.6670-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.87க்கும் விற்பனையாகிறது. இது வரலாற்றில் புதிய உச்சம் என்ற நிலையை எட்டியது. தொடர்ந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. இப்படியே போனால் ஓரிரு நாளில் சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து விடுமோ? என்ற அச்சமும் நிலவி வருகிறது.

The post உச்சத்தில் தங்கம் விலை: இன்றும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது: நகை வாங்குவோர் கலக்கம் appeared first on Dinakaran.

Tags : Shavran ,Chennai ,Shavaran ,Dinakaran ,
× RELATED நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில்...