×

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் கல்வி உதவி நிதி

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை கல்வி உதவி நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.வைப்பு நிதியாக போடப்பட்ட ரூ.5 கோடியில், 30வது புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்து, கலைஞர் அறக்கட்டளை சார்பில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் – பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள ரூ.4 கோடியில் இருந்து வரும் வட்டித் தொகையில் 2007 முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 97 லட்சத்து 90 ஆயிரம். கடந்த மார்ச் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

The post கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் கல்வி உதவி நிதி appeared first on Dinakaran.

Tags : Artist Karunanidhi Foundation ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...