×

ஓய்வுக்கு பிறகு மீண்டும் பிரசாரம்: ராமதாஸ் கடிதம்

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: முதுமை எவ்வளவு தான் என்னை வாட்டினாலும், கோலூன்றி நடந்தாலும், இறுதி வரை இந்த ஊமை சனங்களுக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வேட்கை தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமானது. மத்தியில் அமைக்கப்படவிருக்கும் ஆட்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையிலிருந்து நாம் அளிக்கவிருக்கும் பங்கு எவ்வளவு என்பதை தீர்மானிப்பதற்குத் தான் வரும் 19ம் நாள் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. அத்தேர்தலின் மூலமான நமது பங்களிப்பு நாற்பதுக்கும் நாற்பதாக இருக்க வேண்டும். தேர்தல் களத்தில் இன்று வரை நாம் தான் முதலில் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதே நிலை தொடர வேண்டும். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த வகையில் வெற்றி தொட்டுவிடும் தொலைவில் தான் உள்ளது. அதை எட்டிப்பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாமகவின் அனைத்து நிலை நிர்வாகிகளும் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நானும் சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பிரசாரத்தில் பயணிக்கவிருக்கிறேன்.

The post ஓய்வுக்கு பிறகு மீண்டும் பிரசாரம்: ராமதாஸ் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Bamaka ,Tamil Nadu ,Ramadas ,Dinakaran ,
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...