×

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி ெபறும்: இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும்; கர்நாடக துணைமுதல்வர் சிவகுமார் பேட்டி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே.சி. வேணுகோபாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக கர்நாடக துணை முதல்வர் டி. சிவகுமார் கேரளா வந்தார். பல்வேறு பகுதிகளில் வேணுகோபாலுடன் சேர்ந்து பிரசாரம் செய்த சிவகுமார், சேர்த்தலாவில் நடந்த ரோடு ஷோவிலும் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் கூறியதாவது: கடந்த தேர்தலில் தென்மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் தான் பாஜவுக்கு ஆதரவான அலை வீசியது. ஆனால் இந்த முறை அப்படி அல்ல. கர்நாடகாவில் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பாஜ அலை வீசவில்லை. கர்நாடகாவில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகாவில் நாங்கள் அளித்த 5 கேரண்டிகளையும் நிறைவேற்றி விட்டோம். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அரசு மீது நம்பகத்தன்மை ஏற்பட்டுள்ளது.

இதுதான் எங்களது நம்பிக்கைக்கு முக்கிய காரணமாகும். ஆனால் ஒன்றிய அரசு அளித்த எந்த கேரண்டியும் நிறைவேற்றப்பட வில்லை. தமிழ்நாடு, கேரளா, கர்நாடக உள்பட தென் மாநிலங்கள் அளிக்கும் பலத்தால் இந்தியா கூட்டணி இந்த முறை நிச்சயம் ஆட்சியை கைப்பற்றும். கேரளாவில் 20 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 20 தொகுதிகளிலும், தெலங்கானாவில் 10க்கும் அதிகமான தொகுதிகளிலும், தமிழ்நாட்டில் அனைத்துத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி ெபறும்: இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும்; கர்நாடக துணைமுதல்வர் சிவகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Karnataka ,Deputy Chief Minister ,Sivakumar ,Thiruvananthapuram ,Congress ,Alappuzha ,Kerala ,K.C. ,Venugopal ,D. Sivakumar ,Karla ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...