×

டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா?

புதுடெல்லி: டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வழக்கில் ஜாமீன் கோரியும், அமலாக்கத்துறை கைது நடவடிக்கை ஆகியவைக்கு எதிராகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவால் கைதின் மூலமாக அவரது கட்சியை முழுமையாக முடக்குவது தான் அமலாக்கத்துறை மற்றும் பாஜவின் முக்கிய திட்டமாக இருக்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 3ம் தேதி ஒத்திவைத்து இருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ன காந்தா சர்மா இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்க உள்ளார்.

The post டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,Kejriwal ,New Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Delhi government ,Tihar ,Dinakaran ,
× RELATED 70,772 கிலோ ஹெராயின் மாயம்; ஒன்றிய உள்துறை...