×

மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கூறி இருக்கிற பணத்தையும் சுரண்டுகின்றனர்: பாஜ மீது அமைச்சர் தாக்கு

திருச்சுழி: ராமநாதபுரம் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து, விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: இந்த தேர்தல் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை தீர்மானிக்கக்கூடிய தேர்தலாக உள்ளது. கடந்த பத்து வருட ஆட்சியில் மோடி என்ன நன்மையை செய்திருக்கிறார்? ஆட்சி பொறுப்புக்கு வந்தால் சுவிட்சர்லாந்தில் இருக்கக்கூடிய பணத்தை எல்லாம் கொண்டு வந்து உங்கள் அத்தனை பேருக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று சொன்னார். ஆனால் இன்று வரை 15 பைசா கூட சாமானியர்களின் வங்கி கணக்கில் செலுத்தவில்லை. பணம் போடவில்லை என்றாலும் பரவாயில்லை. ஏற்கனவே மக்கள் வைத்துள்ள வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கூறி, இருக்கிற பணத்தையும் சுரண்டுகின்றனர்.மோடி ஆட்சி மீண்டும் வந்தால் ஜனநாயகத்தை மொத்தமாக குழி தோண்டி புதைத்து விடுவார்கள். இவ்வாறு கூறினார்.

The post மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கூறி இருக்கிற பணத்தையும் சுரண்டுகின்றனர்: பாஜ மீது அமைச்சர் தாக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Finance ,Minister ,Thangam Tennarasu ,Virudhunagar district ,Thiruchuzhi ,Ramanathapuram Constituency ,Navaskani ,Dinakaran ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...