×

ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு: அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ராமேஸ்வரம் கோயிலில் மூலவருக்கும், நந்திக்கும் இடையே உள்ள உண்டியலை இடமாற்றக்கோரிய வழக்கில் மனுதாரர் கோரிக்கை குறித்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் கோயிலில் ஆகம விதிகளுக்கு எதிராக மூலவர் -நந்திக்கு இடையே உண்டியல் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு: அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Moolavar ,Nandi ,Rameswaram temple ,Agama ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...