×

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

*மகிழ்ச்சியுடன் பொழுதை போக்கினர்

ஏலகிரி : ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தமிழ்நாட்டில் உள்ள ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று வளர்ச்சியுற்ற சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இம்மலையே ஏழைகளின் ஊட்டி எனவும், மலைகளின் இளவரசி எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலை 14 கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டுள்ளது.

இதன் காரணமாக ஏலகிரி மலைக்கு அண்டை மாநிலங்களில் இருந்தும் , தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து பொழுதை போக்கி செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏலகிரி மலையில் முக்கிய சுற்றுலா தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சகச விளையாட்டுத் தலங்கள், பறவைகள் சரணாலயங்கள், மூலிகை பண்ணைகள், மங்கலம் சுவாமிமலை ஏற்றம், தாமரைக் குளம், கதவநாச்சியம்மன் திருக்கோயில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட தலங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் திரண்டனர். பலர் படகு இல்லத்தில் வரிசையில் நின்று குடும்பத்தோடும், நண்பர்களோடும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் இயற்கை பூங்காவில் மலர்கள், பூக்களை ரசித்தும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளுக்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சாகச விளையாட்டு தளத்தை துவங்க வேண்டும், 100 ஏக்கரில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Mount Elgiri ,Elgiri ,Jolarpet ,Tamil Nadu ,Ooty ,Godaikanal ,Yardad ,the Poor ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி