×

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் மொபட்டில் 50,000 திருட்டு: விரட்டிசென்று பணத்தை மீட்ட பெண் காவலர்

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி அன்னை தெரசா பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் (60), ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர். இவர் நேற்று காலை 11.30 மணியளவில் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் உள்ள ஒரு வங்கியில் ₹50 ஆயிரத்தை எடுத்துள்ளார். அதை தனது மொபட்டில் வைத்துக்கொண்டு வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு மொபட்டை நிறுத்தி விட்டு சித்தா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சில நிமிடங்களில் மொபட்டின் சீட்டை திறக்கும் சத்தம் கேட்டு அவர் எட்டிப்பார்த்தபோது ஒரு மர்ம நபர் மொபட்டில் இருந்த பணத்தை திருடுவதை கண்டு, ‘‘திருடன், திருடன்’’ என கூச்சலிட்டார். அதற்குள் அந்த மர்ம நபர் ஓட்டம் பிடித்தார். அப்போது அவரை விரட்டுவது போல பைக்கில் இருவர் சென்றுள்ளனர். அந்த நபர் அவர்களுடன் பைக்கில் ஏறி தப்ப முயலவே அங்கிருந்த ஆயுதப்படை பெண் காவலர் ஜீவிதா அவர்களை விரட்டிச் சென்று, மர்ம நபரின் கையில் இருந்த பணப்பையை இழுத்து பறித்தார். பின்னர் அவரது செல்போனையும் பறித்தார். பொதுமக்களும் அவர்களை மடக்க முயன்றனர். ஆனால் 3 பேரும் சிக்காமல் தப்பிவிட்டனர். இதையடுத்து பணத்தை அகஸ்டினிடம் போலீசார் ஒப்படைத்தனர். துணிச்சலாக போராடி கொள்ளையரிடமிருந்து பணத்தை மீட்ட பெண் காவலர் ஜீவிதாவை அலுவலகத்திற்கு நேரில் அழைத்து எஸ்பி ராஜேஷ் கண்ணன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்….

The post வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் மொபட்டில் 50,000 திருட்டு: விரட்டிசென்று பணத்தை மீட்ட பெண் காவலர் appeared first on Dinakaran.

Tags : Vellore collector ,Vellore ,Augustine ,Sathuvachari Mother Teresa ,Dinakaran ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...