×

தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு ரத்து கோரிய ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை  நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய  கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக  குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், விவாத நிகழ்ச்சி தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக  கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு போலீஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர்  மகேந்திர சிங் தோனி 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை நிராகரிக்க கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த  மனு நீதிபதி என்.சேஷசாயி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் தற்போது  சாட்சி விசாரணை தொடங்கியுள்ளது. இந்த மனுவை ஏற்றுக் கொண்டால் பிரதான  வழக்கு முடிவுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என தெரிவித்து சம்பத்குமாரின்  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சாட்சி விசாரணையை சம்பத்குமார் எதிர் கொள்ள  வேண்டும். தோனி தொடர்ந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்றும்  நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்….

The post தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு ரத்து கோரிய ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : IPS ,Doni ,iCort ,Chennai ,Chambathkumar ,IPL ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தவறான...