×

15ம் தேதி முதல் தடை காலம் மீன் விலை திடீர் உயர்வு

சென்னை: மீன் பிடி தடைக்காலம் 15ம் தேதி தொடங்குகிறது. 61 நாட்கள் இது நடைமுறையில் இருக்கும். மீன்பிடி தடைக்காலத்திற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். விடுமுறை தினமான நேற்று குறைந்த விசைபடகுகளே திரும்பின.

இதன் காரணமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விலை அதிகரித்தது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.900க்கு விற்கபட்ட வஞ்சிரம் நேற்று ரூ.1300க்கு விற்பனையானது. கொடுவா மீன் ரூ.400க்கு விற்பனை விற்கப்பட்டு வந்தது. அது நேற்று ரூ.600க்கு விற்பனையானது. அடுத்த வாரம் முதல் மீன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

The post 15ம் தேதி முதல் தடை காலம் மீன் விலை திடீர் உயர்வு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!