×

‘4 லட்சம்… இல்ல இல்ல 4,000 சீட் ஜெயிப்போம்’:மோடி பேரணியில் நிதிஷ்குமார் உளறல்

பாட்னா: பிரதமர் மோடி பங்கேற்ற பேரணியில், தேசிய ஜனநாயக கூட்டணி 4,000க்கும் மேற்பட்ட சீட்களில் ஜெயிக்கும் என உளறிய பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சமூக ஊடகங்களில் பலரும் கிண்டல் செய்கின்றனர். பீகாரின் நவாடா மாவட்டத்தில் பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடியும், 3 மாதத்திற்கு முன்பாக மீண்டும் பாஜவுடன் இணைந்த அம்மாநில முதல்வர், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரும் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி பேசுவதற்கு முன்பாக பேசிய நிதிஷ் குமார், ‘‘மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 4 லட்சம் இடங்களில்…’’ என கூறி தடுமாறிய நிலையில், தன்னை திருத்திக் கொண்டு, ‘‘4 ஆயிரம் இடங்களில் வெற்றி பெறும்’’ எனக் கூறிக் கொண்டே பிரதமர் மோடியை பார்த்தார்.

பிரதமர் முன்பாகவே முதல்வர் நிதிஷ் உளறுவதை பார்த்து அக்கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன. பலரும் நிதிஷை கிண்டலடிக்கின்றனர். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் சரிகா பஸ்வான், ‘‘முதல்வர் நிதிஷ் முதலில் 4 லட்சம் எம்பிக்கள் பெற வாழ்த்து தெரிவிக்க விரும்பினார். பின்னர் அது கொஞ்சம் அதிகமாக இருக்கும் என நினைத்து 4 ஆயிரத்தோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம்’’ என கேலி செய்துள்ளார்.

The post ‘4 லட்சம்… இல்ல இல்ல 4,000 சீட் ஜெயிப்போம்’:மோடி பேரணியில் நிதிஷ்குமார் உளறல் appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar ,Modi ,Patna ,Bihar ,Chief Minister ,NDA ,BJP ,National Democratic Alliance ,Nawada district ,Dinakaran ,
× RELATED பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி...